நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம்

ஆய்வுகள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Nov 20, 2014 Viewers: 1947


நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம்

 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம்

மிகச் சிறிது காலத்திற்கு முன்பு வரை கூட தமிழக முஸ்லிம் பெண்களிடம் ஹிஜாப் பற்றிய சரியான விழிப்பணர்வு இல்லாதிருந்தது.

சில பகுதிகளில் வெள்ளை வேட்டியை சேலைக்கு மேல் சுற்றிக் கொள்வதே இஸ்லாமிய ஹிஜாபாக இருந்தது. இன்னும் சில பகுதிகளில் சேலையோடு வெளியில் நடமாடுகிற வழக்கம் இருந்தது. மற்ற மதப் பெண்களிலிருந்து வித்தியாசப்படும் விதத்தில் தலையில் முக்காடாகப் போட்டுக் கொள்வார்கள். வேறு சில பகுதிகளில் அந்த வித்தியாசமும் இல்லாமலிருந்தது.

பெண்கள் அந்நிய ஆடவர் முன் தங்களின் அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது என்பது பற்றி பேசும் திருக்குர்ஆனின் வசனத்தின் ஒரு பகுதியில் “தங்கள் முந்தானைகளை தங்களின் மேல் சட்டைகள் மீது போட்டுக் கொள்ளட்டும்.” [அல்குர்ஆன் 24:31] என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேல் சட்டை நெஞ்சுப் பகுதியை மறைத்திருந்தாலும் அதன் மீது கூடுதலாக முந்தானையை தொங்க விட வேண்டும் என்ற அல்லாஹ்வின் உத்தரவில் இருக்கும் நோக்கத்தையும் நியாயத்தையும் கவனிக்க வேண்டும்.

மேலும் அதே வசனத்தில் இன்னொரு பகுதியில்"தங்களது அலங்காரத்தில் தாம் மறைத்திருப்பது அறியப்படுவதற்காகத் தம் கால்களை அடி(த்து நட)க்க வேண்டாம்.” என்று கூறுகிறான்.

ஒரு பெண் நடக்கும்போது ஏற்படுகிற சப்தத்தால் கூட அந்நிய ஆணின் கவனம் திருப்பப்படலாம். அதனால் பெண்கள் தங்கள் கால்களை மண்ணில் அடித்து நடக்க வேண்டாம் என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து ஒரு பெண் அந்நிய ஆணின் கவனத்தை எந்த வகையிலும் தன் பக்கம் திருப்பிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிகிறோம்.

மார்க்க அறிவு பரவி, இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் அணியும் ஹிஜாப் முறையை தொலைக்காட்சி வழியாக காணவும் செய்த நம் தமிழக முஸ்லிம் பெண்களிடத்தில் ஹிஜாப் முறையில் விழிப்புணர்வு ஏற்பட்டது.

பரவலாக எல்லாப் பகுதிகளிலும் அபாயா என்று அரபியில் குறிப்பிடப்படும் முழுமையான கருப்பு நிற அங்கியை அணிகிற நடைமுறை ஏற்பட்டது.

இப்போது கண்ணையும் கருத்தையும் கவர்கிற விவாதத்தில் பூ வேலைப்பாடுகளுடனும் விதவிதமான டிசைன்களுடனும் அபாயா அணியும் பழக்கம் பரவிக் கொண்டிருக்கிறது.

இது இந்த ஹிஜாப் ஏற்ப்படுத்தப்பட்ட நோக்கத்திற்கே மாற்றமாக உள்ளதை கவனிக்க வேண்டும். உள்ளே உடலை முழுமையாக மறைக்கிற உடை அணிந்திருந்தாலும் அவற்றிலுள்ள பிறர் கவனத்தைக் கவரும் நிறங்களும், டிசைன்களும் அந்நிய ஆண்களின் பார்வையில் பட்டு அவர்களின் கவனத்தைத் திருப்பிவிடக் கூடாது என்கிற நோக்கத்தில் தான் முழுமையான கருப்பு அபாயா அந்த ஆடைகளுக்கு மேல் அணியப்படுகிறது.

அப்படியிருக்கையில் அந்த கருப்பு அபாயாக்களிலேயே கண்ணைக் கவரும் டிசைன்களும் பூ வேலைப்பாடுகளும் செய்யப்பட்டால் அந்த ஆடை உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைப்பதாக இல்லையா?

இதில் கவனம் செலுத்தாமல் இத்தகைய புர்காக்களை அணியும் சகோதரிகளுக்கு ஒரு கேள்வி!: ஒரு பெண் தன் உடலை மறைக்க வேண்டிய அளவுக்கு முழுமையாக மறைக்கும் ஆடையை அணிந்திருக்கிறாள். ஆனால் அது இறுக்கமாக உள்ளது. அதனால் அவளது உடல் பாகங்களில் பலப் பகுதிகள் பார்ப்பவர்களுக்கு கவர்ச்சியாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட ஆடை அணிந்துகொண்டு அப்பெண் வெளியில் நடமாடுவதை சரி என்று சொல்கிறீர்களா?

தவறு என்று தான் சொல்வீர்கள்! அந்த உடை உடலை மறைத்தாலும் அந்நிய ஆண்களின் கவனத்தைத் திருப்புகிற விதத்தில் அமைந்துள்ளது என்பீர்கள். அப்படியானால் அதே காரணம் இந்த கவர்சிகர புர்காக்களை அணிவதிலும் உள்ளது என்பதால் இவற்றை அணிவதைப் புறக்கணிக்க வேண்டும்.

பெண்களின் முழுமையான ஆடை முறையும், வெளியில் அவர்கள் நடமாடுவதற்கான ஒழுங்குமுறையும் அந்நிய ஆடவர்களின் கவனத்தைத் திருப்பக் கூடாது என்பதற்காகவே நம் சத்திய இஸ்லாத்தில் வகுக்கப்பட்டுள்ளன. அதற்க்கு ஆதாரமாக பல குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன.

“...பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்னில் எவனுடைய உள்ளத்தில் (பாவம் எனும்) நோய் இருக்கிறதோ அவன் (உங்கள் மீது தவறான) ஆசை கொள்வான். மேலும் நீங்கள் நல்ல பேச்சையே பேசுங்கள்.” (அல்குர்ஆன் 33:32)

பேசும் பேச்சை குழைந்தும் நளினமாகவும் பேசி அந்நிய ஆணின் கவனத்தை திருப்பக் கூடாது என்று பெண்களுக்கான கூடுதல் ஒழுக்கத்தை அல்லாஹ் கற்றுக் கொடுக்கிறான்.

ஆக எந்த விதத்திலும் ஒரு பெண்ணின் நடை, உடை, பாவனை அன்னிய ஆணின் கவனத்தை ஈர்க்கக் கூடாது. இந்த அடிப்படையில், இப்போது நம் பெண்களிடம் பரவி வரும் கவர்சிகர புர்காக்கள் அணியும் நடைமுறை அறவே ஒழிக்கப்பட வேண்டும்!

நல்ல மாற்றத்தில் ஏற்பட்டுள்ள இந்த தீய மாற்றத்தை நம் சகோதரிகள் கைவிடுவதுடன் அதனை எதிர்க்கவும் வேண்டும்.

 

-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil 

 

தேடல்
தொடர்புடைய பதிவுகள்
001 AlFathiha அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்! அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2 அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்? அரஃபா பேருரை! அரபியில்தான் குத்பாவா? அலைபேசி ஒழுக்கங்கள் அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2] அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம் ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை! ஆண் குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்தல் ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...? இந்துக்களின் தாய்மதம் இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்... இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்... இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5 இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6 இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2 இமாம் ஷாபிஈ (ரஹ்) இறுதி வரை ஏகத்துவம் இஸ்ரவேலரும் காளை மாடும்... இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா? உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1 உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்... உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்! என்னருமை தலித் சகோதரரே! எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்... ஒரு நடிகையின் வாக்குமூலம்! கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி! கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா? கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி குகை தோழர்களின் கதை குணத்தை மாற்ற முடியுமா? குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 ! குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 ! கேம் விபரீதங்கள் கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.? கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்! கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்! சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்! சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல்! சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்... சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு! சொர்கத்தில் துணைகள் ஜிஹாத் - ஒரு விளக்கம் ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ] தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா? தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01 திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா? தேவனுக்கு குமாரனா? தொழுகை உடைய "ரூக்ன்" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது? தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ் தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?! நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8 நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள் நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு) நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?) நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்..... பரக்கத்தை இழந்த ரஹ்மத்...! பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்! பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்! பேசிய எறும்பு... பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி! மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்! மறுமையில் ஓர் உரையாடல்... மஸ்ஜிதின் ஒழுக்கங்கள் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா? மீலாதும் மவ்லிதும் முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான் முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல் முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌... மூஸா நபியும் ஹிள்ர் நபியும்! யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்... ரமலானும் ஈமானும்! ரமளானின் கடைசி பத்து நாட்கள் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி! வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02 வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01 ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7 ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4] ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்! ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 6 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5 ஹதீஸ் எப்படி புரிவது?ஹதீஸ் - 4( தொழுகையை முறிக்கும் மூன்று) ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2 TEACHERS TRAINING COURSE